Wednesday, July 2, 2014

ஊடலும் கூடலும்.......! 






ஒன்றுமில்லை என்ற 
ஒத்த வார்த்தையில்
ஓராயிரம் அரத்தங்களை 
ஒளித்து வைத்து விட்டு 
ஓயாமல் என்னை வதைப்பது ஏனோ..........?



உன் பாதி மௌனத்தில் 
மோதி மூக்குடைந்து
கூனிக் குறுகி
நாணத்தில் நான்....!




மூச்சடக்கி முக்குளிக்கிறேன்
உயிர் திணறுகிறது
முத்தைத்தான் காணோம்....!


ஏனடி சொன்னாய்..?
எதற்கு சொன்னாய்..?
என்னை கொல்லவா..?
உயிரை வெல்லவா..?
சட்டென்று சொன்னதால்
திக்குமுக்காடி போனேன் 
காதோடு சொன்னதால் 
பித்தனாக ஆகிவிட்டேன்....!





உள்ளத்தையும் திறந்து விட்டாய்
கள்ளத்தையும் களைந்து விட்டாய்
தோழி நீ சொன்ன காதல்
கொண்டுவந்து சேர்க்கும்
காத்திரு என்னை...!













13 comments:

  1. கள்ளத்ததையும் களைந்து விட்டாய்//
    கள்ளத்தையா, கள்ளத்தனத்தை யா? எதோ ஸ்லிப் ஆகியிருக்கு.. :)

    எல்லாம் நல்லா இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. கள்ளம் என்பது கள்ளத்தனைத்தை தான் சொல்லும் நண்பா!

      Delete
    2. ஒரு "த" எக்ஸ்ட்ராவா இருக்குன்னு சொன்னேன்.. "கள்ளத்தையும்" ன்னு இருக்கணும் இல்லையா? TYPO..

      Delete
    3. நன்றி நண்பா திருத்தி விட்டேன்

      Delete
  2. மூச்சடக்கி முக்குளிக்கிறேன்
    உயிர் திணறுகிறது
    முத்தைத்தான் காணோம்....!//

    எப்படி பாஸ் இப்படியெல்லாம் ???

    ReplyDelete
  3. வாத்தி வேணா, அழுதிருவேன்

    ReplyDelete
  4. எல்லா கவிதையும் நல்லா இருக்கு !!

    ReplyDelete
  5. கவிதை அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அழகான காதல் கவிதைகள்! அருமை! நன்றி!

    ReplyDelete
  7. குட்டிம்மா கவிதைகள் அருமையிலும் அருமை... அண்ணே...

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!