Saturday, May 31, 2014

சென்ற பாகத்தில் மந்திரவாதிகளின் பேச்சு, சாதுரியம், சாமர்த்தியம்  பற்றியும் அதில் நாம் விழுவது எப்படி என்று   பார்த்தோம். இந்த பாகத்தில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்துகட்டி நம் காதில் எப்படி பூ சுற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் இந்த மந்திர வேலைகளை மூன்று பிரிவாக பிரித்து நம்மிடம் இருந்து பணமாக பொருளாக ஆட்டையப் போடுவார்கள்.
  1. பேய் பிசாசுகளை அடையாளம் காணுதல்  உறுதிப் படுத்தல்  
  2. அவற்றை நம் இடத்திலிருந்தும் , பாதிக்கப்பட்டவரிடம் இருந்தும் விரட்டுதல் 
  3.  இனி அவைகள் நம்மிடம் அண்டாதவாறு பாதுகாப்பு செய்தல் 

நம் இடத்தில் இருக்கும் பேய் பிசாசுகளை அடையாளம் காண பலமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு முறை, நம் வீட்டிக்கு மந்திரவாதி வருவதற்கு முன்பு வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் ஓன்று  கொடுப்பார். அதில் முக்கியமாக மூன்று வர்ணத்தில் கோழி முட்டை என்று இருக்கும். மூன்று வர்ணத்தில் தான் உலகத்தில் கோழி முட்டை இருக்கின்றது என்பது வேறு விடயம் (பிரவுன், பழுப்பு, நல்ல வெள்ளை என்பன அவை). குறித்த நாளில் மந்திரவாதி நம் வீட்டுக்கு வருகை தந்து, வாங்கிய  வாங்கப் போகின்ற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மந்திரம் சொல்லிவிட்டு அந்த மூன்று முட்டைகளையும் பரிசோதித்து விட்டு அதில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்தெடுத்து வீட்டு முற்றத்தில் அவர் கையால் 2 அடி வரை குழி  தோண்டி மந்திரம் மீண்டும் சொல்லி முட்டையை அவர் கையாலேயே நாம் எல்லோரும் பார்க்க குழியில்  வைத்து மந்திர தண்ணிய அதன் மீது தெளித்து குழியை மூடி விடுவார், பின் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள திடகாத்திரமான ஆணை கூப்பிட்டு அந்த குழியை மீண்டும் தோண்டி அந்த முட்டையை எடுத்து வர சொல்லி விட்டு நாம் கொடுத்த அவர் சிற்றுண்டியில் கவனமாக இருப்பார். தோண்ட சென்றவர் அன்றைய பொழுதுக்கு தோண்டினாலும் மசகு எண்ணை வந்தாலும் வருமே தவிர முட்டை கிடைக்காது. உடனே மந்திரவாதி அந்த இடத்துக்கு வந்து குழியை பரிசோதித்து முட்டையை கொண்டு சென்ற பேயின் பூர்வீகமும் அது ஏன் நம்மை பிடித்தது என்ற வெவரமும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுவார்.

நடந்தது இதுதான், தங்கம் வேலைகளுக்கு  பாவிக்கப்படும் வெண்காரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு தன்மை இருக்கிறது, காற்றுப் பட்டால் திண்மம் ஆகிவிடும், அப்படி அதனை திண்மமாக்கி முட்டை வடிவத்தில் மந்திரவாதி சீவி வைத்துக் கொள்வார் யாருக்கும் தெரியாமல். இந்த முட்டை வெவகாரத்தில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்து எடுத்ததுக்கும் காரணம், இந்த வெண்காரத்தால் செய்யப்பட்ட முட்டை அதே மாதிரி கலரில் இருப்பது ஆகும். உண்மையான கோழி முட்டையையும் இந்த வெண்கார முட்டையையும் மாற்றுவதுதான் மந்திரவாதியின் உழைப்பு தந்திரம். பின் அவர் கையால் வெண்கார முட்டையை குழியுனுள்  வைப்பதும் யாரும் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக தான். அதன் பின் மந்திரத் தண்ணி தெளிப்பதில் தான் விசயமே இருக்கிறது அது மந்திரத் தண்ணி அல்ல. வெறும் பச்சத்தண்ணி தான். வெண்காரத்தில் ஒரு தன்மை உள்ளது, தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடும், விஞ்ஞான முறைப்படி சொல்வதானால், தண்ணீர் பட்டவுடன் எச்சமில்லாமல் தகனமடையும். இப்போ புரிந்திருக்கும் முட்டை எங்கு போயிருக்கும் என்று.

இப்படி ஆயிரம் வழிகளில் பேய் பிசாசுகளை அடையாளம் காணலாம் , அடுத்த பாகத்தில் கண்டு பிடித்த பேய் பிசாசுகளை நம் வீட்டில் இருந்தும் நம்மில் இருந்தும் எப்படி விரட்டுவார்கள் என்று பார்ப்போம்.

தொடரும்..............!

 முந்தைய பாகத்திக்கு : பாகம் 01

Friday, May 30, 2014

சிறந்த மந்திரவாதி ஆவதற்கு முதலில் நா வன்மை அவசியம் ஆகிறது, உலகில் உள்ள எல்லோரையும் ஓன்று கூட்டி ஒருத்தர் விடாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சாஸ்த்திரத்தை நா வன்மையால் கூறமுடியும், "நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்வீர்கள் உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கூறினால் யார்தான் மறுக்க போகிறார்கள். இது சாதாரண மனித மனோன் நிலை. இதுதான் மந்திரவாதிகளின் முதல் அஸ்திரம்.

இரண்டாவது சமயோசிதம், உதாரணம் மந்திரவாதியிடம் நீங்கள் சென்றால் நீங்கள் விபரம் சொல்லுவதற்கு முன்பே அவர் விபரம் சொல்லுவார் இப்படி, "தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்பார், உடனே நாம் ஏதாவது தொலைத்துவிட்டுத்தான் அங்கு போயிருந்தோம் என்றால் உடனே நாம் "கிடைக்குமா? கிடைக்காதா?" என்போம். அவருக்கு நிச்சயம் ஆகிவிடும் நாம் தொலைத்து விட்டுதான் வந்திருக்கிறோம் என்று. ஒரு வேளை நாம் வீட்டில் உள்ளவரின் நோய் சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தால், நாம் யோசிப்போம் நாம் நோய்க்கு  மாந்திரிகம் பார்க்க வந்திருக்கிறோம் இவர் தொலைத்த கதை சொல்கிறார் என்று, இப்போதான் சமயோசிதம் தேவை. நாம் யோசிப்பதை பார்த்ததும் அவர் அடுத்த பிட்டை போடுவார், "வாழ்கையில் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்று, நாம் அவுட். வீட்டில் யாரும் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது மேற்சொன்னவை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் ஏற்ற இறக்கங்ககளுடன் சொல்ல வேண்டும்.

மூன்றாவது வார்த்தை ஜாலங்ககள், சொல் மயக்கம் வரும் படி பேசுவது, இப்போ நம்மிடம் சொல்லுவார், "எல்லாவற்றையும் பார்க்கலாம், முதலில் உங்கள் வீட்டு முற்றத்தில் கால் படாத மண்ணை கைபடாமல் கொண்டுவா" என்பார், சின்ன விசயம்தான் ஆனால் சட்டென்று விளங்காது. அது மட்டுமல்ல, "ஒரு கிடா ஆடு வேண்டும் பலி கொடுக்க, ஆனால் அதன் தாயிக்கு இதற்க்கு பிறகு குட்டி இருக்க கூடாது" என்றெல்லாம் நம்மை சுத்தலில் விடுவார்கள், எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள். ஒன்னும் இல்லை முதலில் சொன்னதற்கு நம் முற்றத்தில் பள்ளம் தோண்டி அதற்குள் இருக்கும் மண்ணை கையில் கிளவுஸ் எதாவது போட்டு எடுக்க வேண்டும், மற்றது தாய் இறந்துவிட்ட ஆட்டு கிடா வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் இதெல்லாம் எதற்கு கேட்கிறார்கள் என்பதுதான் இறைவனுக்கு வெளிச்சம்.

அடுத்த பகுதியில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்து கட்டி எப்படி மாந்திரிகம் செய்கிறார்கள் என்று சொல்கிறேன்.

தொடரும்.......!


Thursday, May 29, 2014

நானாகவும் நீயாகவும்
நாம் நமக்காகவும் நட்பாகவும்
எதுவாகவும் எப்படியாகவும்
சொற்களில் தேனாகவும் வேம்பாகவும்
வேம்பில் மருந்தாகவும் கசப்பாகவும்
செய்கை கூடலாகவும் ஊடலாகவும்
ஊடலில் வெறுப்பாகவும் விருப்பாகவும்

அதுவாக எதுவாக அப்படியாக
என்பது இல்லை செப்படி வித்தையாக
ஏட்டிலும் இல்லை 
யார் பாட்டிலும் இல்லை
எவர் கூற்றிலும் இல்லை
உன் மனதை திறந்தால்
இருக்கும் அன்பு சொல்லுமடி






Monday, May 26, 2014

உயிர் என்றாலும் உறவென்றாலும் 
அன்பில் கட்டுன்ட்டாலும் 
பாசத்தில் பிணைந்திருந்தாலும் 
பிழையொன்று வந்துவிட்டால் 
பொய்யாகிப் போகுமா 
திளைந்திருந்த அந்நாட்கள் 
இதுதானா இவ்வளவுதானா என்று 
சலிப்படைய வெறுப்படைய 
மறுக்கும் நெஞ்சம்அறியாது 
செய்த தவறேன்று புரியாது 
தண்டனைக்கு தப்பவில்லை
சிந்தனை சிறகடிக்கவில்லை
சிந்திப்பதே பறந்து விட்டது குட்டிம்மா 



- என் முகப் பக்கத்தில் இருந்து 

Sunday, May 25, 2014


வளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது 

நம்மைச் சுற்றி கடனும் 
என்னைச் சுற்றி கடலும் இல்லாவிட்டால் 
நடந்தே ஊர் வருவேன் 



கேட்பதை எல்லாம் கொடுப்பவன் அல்ல இறைவன் 
தேவையானதை கொடுப்பவனே இறைவன் 



எதிர்பார்ப்பு இல்லாத அன்பே ஜெயிக்கும் 
ஆகக் குறைந்த்தது ஒரு லைக்காவது



புத்திசாலித்தனம் என்பது ஜட்டி மாதிரி 
யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது



வில்லன் கதாநாயகனை துப்பாக்கியால் சுடுகிறான், குண்டு வருகிறது, 
கதாநாயகன் குனிந்து மறைந்து தப்பினால் அது யாதர்த்த சினிமா 
வருகிற குண்டை பல்லால் கடித்து துப்பினால் அது கமர்ஷியல் சினிமா 



ஆயிரம் யானைகள் ஒரு காட்டில் இருந்தாலும் அந்தக் காட்டிற்கு எந்த சேதாரமும் ஏற்படாது - ஆனால் நாலு மனிதர்கள் காட்டின் ஓரம் குடியேறினால்...............!
ஒரு காட்டினால் ஆயிரம் யானைகளுக்கு அவைகளின் ஆயுள் முழுக்க உணவளிக்க முடியும், மனிதார்களினால்................!



கல்யாண வீடோ கருமாதி வீடோ ஊரே கூடி நின்னாலும் மனம் என்னாவோ விருப்பத்துக்குரியவர் வந்தாரா, வாழ்த்தோ ஆறுதலோ சொன்னாரா என்றுதான் தேடுகிறது 
என்ன மனப் பாங்கு எனப் புரியவில்லை




நான் அதுவாக இல்லவே இல்லை என்று நிருபிப்பதை விட நான் இதுவேதான் என்று புரிய வைப்பது இலகுவானது




தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்



என் முகப்பக்கங்களிருந்து 


Friday, May 23, 2014

கண்ணாமூச்சி ஆட்டம்
எனக்கும் வருகிறது 
உன்னை விட நன்றாக குட்டிம்மா !!! 

ஆரம்பித்து வைத்தவளும் நீதான் 
கற்றுக் கொண்டதும் உன்னிடம் தான் 
இருந்தாலும் உன்னை விட நன்றாக .....!!! 

ஆச்சரியம், 
நெளிவு சுளிவுகளில் 
வளைவது இரும்பின் இதயமோ ..!!!

விழுந்து அடிபட்டு
வலியின் துயரம் உயிரை நெரித்தாலும்
உனைக் கண்ட பொழுது முகம் மலர்வது ஏனோ ...!!!

வேதனை கண்வழியே தெறிக்கும் போது
சோதனையாய் உன் மதி கண்டால்
இன்பம் பெருகுது ஏனோ ...!!!

கள்ளி உன் கண்ணாமூச்சி ஆட்டம்
எனக்கும் வருகிறது
உன்னை விட நன்றாக குட்டிம்மா !!!

Thursday, May 22, 2014

கீழே தரப்படுகின்ற தகவல்கள் நம்பகமான அடிப்படையில் பெறப் பட்டவை

2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின.

இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் என்று தொடங்கி, பின் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் ராணுவப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதை, விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இரவு 7 மணி.

அதிரடிப்படை-8 முற்றுகையிட்டு நின்றிருந்த இடத்தின் ஊடாக சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை சோதனை செய்து, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில், துப்பாக்கியை வீசிவிட்டு, சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

இரவு 10 மணி.

இதற்குமேல் சரணடைய வந்தவர்கள் யாரையும், ராணுவ பகுதிக்குள் உள்ளே அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், இந்த பகுதியூடாக விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் சரணடைவதால், இருளில் சரணடைவது போல வந்து புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை.

18-ம் தேதி அதிகாலை 1.30 மணி.

அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு காவலரணில் இருந்து போன் அழைப்பு வந்தது. “சுமார் 100 பொதுமக்கள் சரணடைய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்”
இரவில் யாரையும் அனுமதிக்க முடியாது. அவர்களை நாளை காலை பகல் வெளிச்சத்தில் வரச் சொல்லுங்கள்” என்றார் ரவிப்பிரிய.

இதற்கு காவலரணில் இருந்த ராணுவ அதிகாரி, “இந்த பொதுமக்கள் கடலேரியில் (நந்திக்கடலுடன் இணைப்பாக உள்ள ஏரி) நிற்கிறார்கள்.

இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி, தம்மை அனுமதிக்கும்படி கோருகிறார்கள். பெண்கள், குழந்தைகளும் உள்ளார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுகின்றன” என்றார்.

“எப்படி இருந்தாலும் அனுமதிக்க முடியாது. அவர்களை மீண்டும் நாளை வரச் சொல்லுங்கள்”

இந்த தகவல், தண்ணீரில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சொல்லப்பட்டது. “வந்த வழியே திரும்பி போங்கள். மீண்டும் நாளை வாருங்கள்”

தம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பது அந்த பொதுமக்களுக்கு நன்கு புரிந்தவுடன், காட்சி மாறியது. பெண்கள், குழந்தைகளுடன் நின்றிருந்த ‘பொதுமக்கள்’ 20 பேர், தமது பைகளில் இருந்து பல ரகத்திலான துப்பாக்கிகளை எடுத்தார்கள்.

58-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவால் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் இரண்டை நோக்கி சுட்டபடியே, அந்த இடத்தில் ராணுவ முற்றுகையை உடைக்க முயன்றார்கள்.

முள்ளிவாய்க்காலுக்குள் முடிக்கப்பட்டு இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு, வெளியேறும் திட்டம் இது என்று ராணுவத்துக்கு புரிந்து போனது. துப்பாக்கியால் சுட்டபடி தண்ணீரில் முன்னேறி வந்தவர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் திருப்பி சுட தொடங்கினார்கள்.

இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டபடி முன்னேற முயன்றவர்களால் நேரே வர முடியவில்லை. தண்ணீருக்கு உள்ளே இடது புறம் திரும்பி ஓடி, நந்திக் கடலோரம் தண்ணீரில் வளர்ந்திருந்த புதர்களுக்குள் மறைந்தார்கள். அந்த புதர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் RPG (Rocket-Propelled Grenade) தாக்குதலை நடத்தினார்கள்.

ராக்கெட்டுகள், அந்த புதர்களை சிதறடித்ததில், அதற்குள் மறைந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். சில மணி நேரத்தின் பின் சூரிய வெளிச்சம் வந்தபின், புதர்களுக்குள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை ராணுவம் வெளியே இழுத்து போட்டபோது, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சூசை, சொர்ணம், ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த 20 பேரில் பிரபாகரன் இல்லை.

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 17-ம் தேதி. இரவு 7 மணி.

சவிந்திர சில்வா தலைமையிலான 58-வது படைப்பிரிவினர், கும்மிருட்டு காரணமாக அன்றைய ஆபரேஷனை நிறுத்தினார்கள். இதையடுத்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்ட சவிந்திர சில்வா, கிளிநொச்சியில் அமைந்திருந்த 58-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு செல்ல கிளம்பினார். அவர் கிளிநொச்சியை சென்றடைந்த போது, நள்ளிரவு நேரமாகி விட்டிருந்தது.

58-வது படைப்பிரிவு தலைமையகத்தில், முள்ளிவாய்க்காலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த உளவு விமானம் எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் சவிந்திர சில்வா.

நேரம் அதிகாலை 1.30.

இந்த நேரத்தில், முள்ளிவாய்க்கால் 58-வது படைப்பிரிவு ஆபரேஷன் சென்டரில் இருந்து போன் அழைப்பு வந்தது. விடுதலைப் புலிகள் ராணுவ முற்றுகையை உடைப்பதற்காக தாக்குதல் நடத்துவதாகவும், 53-வது படைப்பிரிவு முற்றுகையிட்ட இடத்தில் தாக்குதல் நடப்பதாகவும் சொல்லப்பட்டது.

53-வது படைப்பிரிவின் முற்றுகை லைன் மீது தாக்குதல் நடந்தால், அதற்கு அடுத்ததாக உள்ள முற்றுகை லைன், தமது படைப்பிரிவாக 58-வது டிவிஷனுக்குரியது என்பதால், மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டார் சவிந்திர சில்வா.

கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட சவிந்திர சிலாவாவின் ஜீப் புதுக்குடியிருப்பை நெருங்கிய நிலையில், அவரது வாக்கி-டாக்கியில் அழைத்தால், ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர்.

“53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை உடைக்க தாக்குதல் நடத்தும் குழுவில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கிருந்த ராணுவ அம்புலன்ஸ் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக புலிகளின் ரேடியோ ட்ராக்ஸ்மிஷனில் இருந்து தெரிகிறது” என்றார் உளவுப்பிரிவு அதிகாரி.

இதையடுத்து ஜீப்பில் இருந்தபடியே தனது படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார் சவிந்திர சில்வா, “அனைத்து வாகன நடமாட்டங்களையும் உடனே நிறுத்தவும். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸ் உட்பட, எந்த வாகனமும் அசையக்கூடாது.

இந்த நேரத்தில், 53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை தாக்கிய விடுதலைப்புலிகள் அணி, 58-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை நோக்கி வந்துவிட்டது. மீண்டும் வாக்கி-டாக்கியில் ஒரு தகவல் வந்தது. “ராணுவ அம்புலன்ஸ் ஒன்று அந்த பகுதியில் நகர்கிறது. என்ன செய்வது?”

ஜீப்பில் பயணித்தபடியே பயரிங் ஆர்டர் கொடுத்தார் சவிந்திர சில்வா. அப்போது நேரம், அதிகாலை 3 மணி.

அம்புலன்ஸை நோக்கி 58-வது படைப்பிரிவினர் ராக்கெட் தாக்குதல் நடத்த, அது தீப்பிடித்தது. “அம்புலன்ஸூக்குள் இருந்தது யார் என பார்த்துவிட்டு உடனே எனக்கு தகவல் தாருங்கள்” என்றார், சவிந்திர சில்வா.

சில நிமிடங்களில் அந்த தகவல் வந்தது. “அம்புலன்ஸூக்குள் கருகிய நிலையில் இரு உடல்கள் உள்ளன. ஒன்று குள்ளமான பருத்த நபர். மற்றையவர் உயரமான நபர். முகங்கள் அடையாளம் தெரியாதபடி கருகியுள்ளன”

இதையடுத்து, அந்த இருவரும், பிரபாகரனும், பொட்டு அம்மானும் என நினைத்தார் சவிந்திர சில்வா. (ஆனால், அந்த உடல்களுக்கு உரியவர்கள், பிரபாகரனும், பொட்டு அம்மானும் அல்ல)

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என நினைத்த சவிந்திர சில்வா, முள்ளிவாய்க்கால் செல்லும் திட்டத்தை கைவிட்டு, புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்திருந்த 53-வது டிவிஷன் தலைமையகத்தை சென்றடைந்தபோது, நேரம் அதிகாலை 5 மணி.

அங்கே அவருக்கு மற்றொரு செய்தி காத்திருந்தது. 53-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைக்க வந்த விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர், முற்றுகை லைனை உடைத்துக்கொண்டு, ஏற்கனவே 58-வது படைப்பிரிவால் கிளியர் செய்யப்பட்ட யாருமற்ற பகுதிக்குள் (No man’s land) சுமார் 1 கி.மீ. வரை இருளில் சென்று விட்டது தெரியவந்தது.

உடனடியாக, ராணுவ வாகனங்களில் துரத்திச் சென்று அவர்களை தாக்கினர், ராணுவத்தினர். சிலர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்து வீழ்ந்த நிலையில் கைப்பற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி.

சார்ள்ஸ் ஆன்டனி கொல்லப்பட்டபோது, கையில் ஒரு துப்பாக்கியுடன் இருளில் ஓடிக்கொண்டு இருந்தார்.

- நன்றி விறுவிறுப்பு மற்றும் இலங்கை ராணுவம்


-தொடரும்-
உறவாகவும் பிரிவாகவும் 
விஞ்ஞானம் தந்த கண்ணாடித் தடுப்புக்கு 
அப்பால் நீங்களும் இப்பால் நானும் 

தாயாதிச்சொத்துக்கும் 
தாய் வீட்டு சீதனத்துக்கும் 
ஊரே அடிச்சிட்டு கிடைக்கையில
அதில் கடன் கூட வேண்டாமென்று 
உனக்குள்ளும் எனக்குள்ளும் 
கொடுக்கலும் வாங்கலுமாய் 
நமக்குள் நாமே குறுகிக்கிட்டோம் 

பிரிவொன்று வந்து 
வேடிக்கை பார்க்கையில 
அதன் சுவடுகூட தெரியாமல் 
உனக்குள் நீயும் எனக்குள் நானும் 
நம்மை நாம் குறுக்கிகிட்டோம் 

உண்மைதான் 
நம் கண்ணை விற்றுத்தான் 
ஓவியம் வாங்குகிறோம் 
கவலைப் படாதே 
நம் குழந்தைகளின் விழிவழியே 
அதன் வண்ணம் பார்க்கலாம் 

#என் முகப் பக்கத்திலிருந்து 



Wednesday, May 21, 2014

தொபுக்கடீர்ன்னு குதிச்சாச்சுல்ல.....

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!