Sunday, June 29, 2014

சென்ற பாகங்களில் ஒரு மந்திரவாதி நம் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்ற போர்வையில், தன்  தந்திர வித்தைகளாலும் பேச்சு சாதுரியத்தாலும் நம்மை ஏமாற்றி நம் நேரம், பொருள், பணம் என்பவற்றை எல்லாம் எப்படி அபகரிக்கிறான் என்று பார்த்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருந்து மாயம் என்கின்ற போர்வையில் என்னவென்று தெரியாத வஸ்த்துக்களை கொடுத்து, பிற்காலத்தில் நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அதே வேளையில், மூட நம்பிக்கை என்னும் விதையை  நம் மனதில் ஆழ விதைத்து நம்மை அவனுடைய நிரந்தர வாடிக்கையாளர் வேறு ஆக்கி விடுகிறான்.



சரி, நாம் எப்படி அவனின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் அவன் நம்மை தேடி வருவதில்லை, நாம் தான் அவனை தேடி போய் ஏமாறுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், நமக்கு வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம் அறிவுக்கு எட்டியவரை நம் கண்முன்னே தீர்வு கிடைக்காத போது தான், இவ்வாறான வழிகளை  தேர்ந்தெடுக்கிறோம், சிலவேளை பரம்பரையாகவும் சிலருக்கு இந்த நம்பிக்கை தொடர்வது உண்டு. இவ்வாறாக நமக்கு சிக்கல்கள் ஏற்படும் போது, நம்மால் தீர்க்க முடியாவிட்டால் நம் மனம் குழம்பி எப்படியாவது தீர்க்க வேண்டும் என்றுதான் என்னுகிறோமே தவிர அதற்குரிய வழிமுறைகளை தேடுவதில்லை. இந்த நேரத்தில் நாம் நம் சொந்தங்களிடம், நண்பர்களிடம் ஆலோசனை செய்யும் போது அவர்களில் யாரவது இந்த மாதிரி மந்திரவாதிகளிடம் ஏமாந்தது கூட தெரியாமல் ஏமாந்து இருந்தால், அவர்களின் சிபாரிசு அந்த மந்திரவாதியாக தான் இருக்கும். நமக்கும் வேறு மார்க்கம் இல்லாது நாமும் ஏற்றுக் கொண்டு விடுவோம்.



இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும், ஏமாற்றுகின்றான் என்று  நான் சொல்லுகின்ற மந்திரவாதி எப்படி நம் பிரச்சனையை தீர்க்கிறான் என்று. ஊரில் ஒரு விடயம்  சொல்லுவார்கள், ஜலதோஷம் வந்தால் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சுகமடையும், மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளில் குணமடையும் என்று. அதுதான் மந்திரவாதியின் விடயத்தில் நடைபெறுகிறது. போன பாகங்களில் மந்திரவாதி நம்மை ஏமாற்றுகிறான் என்று நான் குறிப்பிட்ட விடயங்களை எடுத்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பிரச்சனை நம் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடைகாரருக்கு வந்தது என்று வைத்துக் கொள்வோம். ஊர் பகுதிகளில் ஜவுளி வியாபாரம் என்பது ஏதாவது பண்டிகைகளை வைத்தே நடைபெறும், அதுவும் குறிப்பிட்ட காலங்களில், பொங்கலுக்கு நல்ல வியாபாரம் இடம்பெறும். அவரும் கடனோ உடனோ வாங்கி பொங்கல் வியாபாரம் பார்ப்பார், அதில் வரும் வருமானத்தை பார்த்து கொஞ்சம் பெருசாக ஆசைப் பட்டு அகலக் கால் வைத்தும் விடுவார். பொங்கல் முடிந்ததும், வியாபாரம் அப்படியே படுத்து விடும். இவருக்கு வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி இவரால் சமாளிக்க முடியாமல் போய் விடும். இந்த நேரத்தில் யாருடையாவது ஆலோசனைப் படி மந்திரவாதியை சரணடைவார். அவரும் நான் முந்திய பாகங்களில் சொன்ன மாதிரி வித்தைகளை காட்டி பெரிய அமௌன்ட்டை ஆட்டையப் போட்டுவிடுவார். அவர் அவரது சித்துவேலைகளை காட்டிமுடிவதற்க்கும் தீபாவளி சீசன் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன வியாபாரம் களைகட்டும். இப்போது அந்த ஜவுளிக் கடைக்காரர் என்ன நினைப்பார், இதெல்லாம் தானாக நடந்ததா இல்லை மந்திரவாதியின் திறமையால் நடந்ததா? அப்புறம் என்ன அவரும் இதே போல் நாலுபேரிடம் மந்திரவாதிக்கு சிபார்சு பண்ணி இந்த மூடநம்பிக்கையை வளர்க்க அயராது பாடுபடுவார்.



ஓன்று மட்டும் கவனித்து பாருங்கள், இப்படி ஊர் வாழ்வில் ஒளியேற்றும் மந்திரவாதிகளின் வாழ்வு எப்போதும் அதலபாதளத்திலேயே இருக்கும், விதிவிலக்காக ஓன்று ரெண்டைத் தவிர. ஏன் இவர்களால் இவர்களுக்கே மந்திர வேலைகள் செய்து அவர்களை வளப்படுத்த முடியாதா? ஊருக்குள் குறி  சொல்லும் பழங்குடி மக்கள் நாம் எப்போது கோடிஸ்வரன் ஆவோம் என்று துல்லியமாக கூறுவார்கள். அவர்களுக்கு இரவு சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்று கணிக்க முடியாமல் சோத்துக்கே திண்டாடுவார்கள். சில மந்திரவாதிகள் எலுமிச்சை பழத்தை வெட்டி ரத்தம் எடுப்பார்கள். அவர்களிடம் நீங்கள் "உங்கள் மந்திரத்தை ஒன்றுக்கு ஆயிரம் தடவை உச்சரித்து இப்போ லேட்டஸ்ட்டாக அப்பிள் பழம் ஒன்றை வெட்டி ரத்தம் எடுத்துக்காட்டுங்கள்" என்று சொல்லுங்கள், அவர்களால் அது முடியவே முடியாது. ரத்தம் போல சிவப்பு கலரில் திரவம் எடுக்க எலுமிச்சை பழத்தில் மட்டுமே முடியும், அப்பிள் பழத்தில் தலைகீழாய் நின்றாலும் முடியாது. அதை நீங்களே செய்யலாம். இதற்கு ஆள் எதற்கு.  

-தொடர்ந்து வரும்.

முந்தைய பாகங்களுக்கு: பாகம் ௦1பாகம் 02பாகம் 03பாகம் 04

Tuesday, June 24, 2014

இந்த ஆட்டத்தில் என்னை கோர்த்துவிட்ட Angel Fish அக்கா, நல்லா வருவீங்க 

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
   

அம்புட்டு நாளைக்கு நான் இருப்பேனா ? இப்போ படுற பாடே பெரும்பாடா இருக்கு போதும்டா சாமி



2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

நிறைய கத்துக்கணும் என்னு நினைக்கேன், என்னனு நினைக்கும் போதுதான் நான் மூணாப்பு பெயிலுங்கிறது ஞாபகம் வருது. என்னத்த சொல்ல.





3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இப்போதுதான், கண்ணாடியில என்னையப் பார்த்து சிரிச்சேன், எதுக்குன்னு தான் மறந்து போயிடுச்சி



4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

அடுத்த நாள் எல்லோரும் செத்தீங்க, ஒரு பத்து குட்டிம்மா கவிதையா எழுதி வெச்சிருந்து அடுத்த நாள் கொலையா கொன்னுட மாட்டேன் 





5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

இத்தனை நாள் எங்களோடு இருந்த உன்னை அடுத்த வீட்டுப் பெண்ணாய் வரும் அந்த நாளில் கண்டிப்பாய் கண்ணீரைத் தவிர வார்த்தை எதுவும் வரப் போவதில்லை எனத் தெரியும் ....

"உனக்காய் அன்பையும் பண்பையும் சீதனமாய் எடுத்துச் செல்கிறாய் மகளே .. உனது புகுந்த வீட்டில் அனைவரிடமும் அன்புடனும் பொறுமையுடனும் கரிசனமாய் இருந்து  அன்பனா சந்தோஷமான ஒரு வீட்டை நிர்வாகிப்பதில் தான் உன் திறமையும் வெற்றியும் ....நல்லதொரு மகளாய் இருந்த நீ சிறந்ததொரு மருமகளாய் இருக்க ஆசிர்வதிக்கிறேன் .."


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

ஜாதியை ஒழித்து பிரதேசவாதங்களை களைந்து மத நல்லிணக்கத்தை உண்டாக்கி உலகம் முழுதும் எல்லோரும் சகல வசதிகளும் சமமாக கிடைக்க முயற்சி செய்வேன்




7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

குட்டிம்மாவிடம், வேறு யாருக்கும் வேண்டும் என்றால் என்னிடம் நிறைய ஸ்டாக் இருக்கு, முற்றிலும் இலவசம்




8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

முன்பென்றால் நிலைமை வேற, இப்போதென்றால் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பொத்திகிட்டு போவேன் 



9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

ஆறுதல்தான் வேறென்னத்தை சொல்ல  




10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


இப்பவும் அப்படிதான் இருக்கேன், வக்கனையா தின்னுட்டு, முகநூல் அரட்டை




ஷப்பா.......! முடியல. என்னா திட்டம். அக்கா மீ பாவம்

இதனை தொடர்ந்து எழுத நண்பர்கள்,

ரஹீம் கஸாலிகோவை முத்தரசு  ஆகியோரை கோர்க்கிறேன் 





Sunday, June 15, 2014

முந்தைய பாகத்தில், நம்மையும் நம் வீட்டையும் பிடித்த பேயினை மந்திரவாதி எப்படி ஓட்டினார்(?) என்று பார்த்தோம். அப்பிடி ஆட்டையை போட்ட பின், இனி நம்மை அது பிடிக்காமல், நெருங்காமல் பாதுகாப்பு எப்படி கொடுப்பார் என்று பார்ப்போம்.

முதலில் நம்மிடம் சொல்லுவார், ஒரு கிடா ஆடு வேண்டும், அதன் தாயிக்கு இதன் பிறகு குட்டி இருக்கக் கூடாது என்று. நமக்கு தலை சுத்திப் போகும் என்ன சொல்கிறார் என்று புரிய. ஒன்றும் குழம்ப வேண்டாம், தாயில்லாத ஆட்டுக்குட்டியை தான் அப்படி சுத்தலில் விட்டு சொன்னார். நேரிடையாக சொன்னால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமாம். இதைத் தேடி கண்டுபிடிக்கவே நமக்கு கொஞ்சம் நாளாகும், அதற்குள் மந்திரவாதியும் பூஜைக்குரிய ஆயத்தங்களை செய்யத் தொடங்குவார். எப்படியும் ஆட்டை கண்டு பிடித்து கொண்டுபோனால், அதனை காலையில் வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு தலையை மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் கொண்டு வந்து தரச் சொல்லுவார், நாமும் அவர் மேல் கொண்ட பாசத்தால் ஆட்டுக் கறியும், தலையையும் மிகவும் பயபக்தியோடு கொண்டு கொடுத்து விட்டு வருவோம். அப்போதே இன்றைக்கு இரவைக்கு பூஜை நடத்த வேண்டும், என்று சொல்லி தலையை வாங்கி வைத்துக் கொள்வார், தண்ணீர் கரையான கடற்கரை, அல்லது ஆற்று ஓரம் லோகேசன் குறித்து கொடுப்பார். அந்த இடத்துக்கு நோயாளியை கொண்டுவரச் சொல்லுவார், பெரும் பாலும் இரவு 10 மணி பிற்பாடு தான் பூஜைக்கு நேரம் குறித்து கொடுப்பார். அவர் சொன்ன படியே நோயாளியும் அவரது  உறவினர்களும், மந்திரவாதி, அவர் சிஷ்யன்களும், பூஜைக்குரிய பொருட்களோடு குறித்த இடத்துக்கு வண்டியில் சென்று இறங்குவார்கள்.



சென்று இறங்கியதும் "இங்க மந்திரம் செய்யும் இடத்தில் சிங்கம், புலி போன்ற பயங்கர உருவங்கள் பயமுறுத்தும், யாரும் பயந்திராதீங்க" அப்படின்னு முத பிட்டை போடுவார். உடனே வந்தவர்களில் வீக்கான பார்ட்டிகள் நாலைந்து பேர் அங்கேயே வண்டிக்கு காவலுக்கு உட்காந்து விடுவார்கள். மிகுதி ஆட்கள் பூஜைக்குரிய இடத்தை அடைவாங்க, அங்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கும், நோயாளியை ஒருபக்கமும் பூஜைப் பொருட்களை மறுபக்கமும் வைத்து விட்டு, நடுவில் ஆட்டுதலையை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள், பூஜை ஆரம்பமாகும், சிஷ்யர்களில் ஒருவன் கையில் சில கொத்துக்களை வைத்துக்கொண்டு பூச்சி பொட்டுகளை கொஞ்சம் தள்ளி நின்று விரட்டிக் கொண்டிருப்பான். பூஜை உச்ச நிலையை அடையும் போது மந்திரவாதி திடிரென்று கத்துவான், அதோ பாருங்க பேய் சிங்க வடிவில் போகிறது, கரடி வடிவில் போகிறது என்று கரடி விடுவான், அப்போது கூட வந்தவர்களில் ஓன்று ரெண்டு பேருக்கு காலடியில் ஈரம் ஆவது கூட நடக்கும், சிலர் இதுக்கு கூட அசரமாட்டாகள். அப்போது ஆட்டுத் தலைமீது எலுமிச்சம் பழத்தை வைத்து விடுவான் மந்திரவாதி, அப்போது பூச்சி வெரட்டிய சிஷ்யன் கையில் இருக்கும் கொத்தை பூஜை இடத்தில் போட்டுவிட்டு, கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பான். மந்திர வாதியும் ஆட்டின் தலையை வெட்ட கத்தியை மந்திரம் சொல்லிக்கொண்டே ஓங்குவான், நம்பினால் நம்புங்க காலையில் வெட்டிய ஆட்டுதலை கத்தத் தொடங்கும், கத்தும் போதே அதனை ரெண்டாப் பிளந்து விடுவான், பின் உடனே அதனை தண்ணீரிலும் தூக்கி எறிந்து விடுவான். இந்த நேரத்தில் கூட  வந்தவர்களில் பயப்படதாவர் கூட பயத்தில் மயங்கி விடுவார். அவர்களுக்கு அடுத்த நாள் பயப்பாட்டுக்கு தாயத்துக் கட்ட என்று சைட் பிசினெஸ் ஓன்று வேறாக மந்திரவாதியின் வீட்டில் ஓடும் என்பது வேற கதை.



உண்மையில் இது சாத்தியமா, ஆட்டுத்தலை கத்தியதா? அப்படி கத்தவைக்க முடியுமா? பார்ப்போம். ஒருநாளும் இறந்த அல்லது துண்டாக்கப் பட்ட ஒரு தலையை கத்த அல்ல சுயமாக ஒரு அணு கூட அசைய வைக்க யாரலும் முடியாது என்பதை சந்தேகமில்லாமல் நம்புங்கள். பின் எப்படி இது, இப்படித்தான், காலையில் ஆட்டுதலை கொண்டு சென்று கொடுத்ததுமே மந்திரவாதி தன் தந்திர வேலையை ஆரம்பித்து விடுவார். ஒரு உயிருள்ள தவளையை எடுத்து, அடையாளம் தெரியாதபடி ஆட்டின் வாயை பிளந்து அதன் நாக்குக்கு கீழே வைத்து விடுவார், அந்த தவளை கத்தவும் கத்தாது, மந்திரவாதியை காட்டிக் கொடுக்கவும் கொடுக்காது. ஆற்றோரங்களில் "இனித்துள்ளா" எனும் செடி உள்ளது (எங்கள் ஊரில் அதன் பெயர் அதுதான், மற்ற இடங்களில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது). இதன் நாற்றம் தவளைக்கு ஒத்துக்காது, தவளை கத்த தொடங்கும், இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்திற்கு  வாருங்கள். அங்கு பூச்சி பொட்டு வெரட்டிகிட்டு இருந்த சிஷ்யப் பயபுள்ளையின் கையில் இருந்த கொத்து அந்த செடிதான், அதனால் தான் அவன் ஆட்டுதலையை விட்டு தள்ளி போச்சி வெரட்டினான். பூஜையின் உச்சத்தில் அவன் கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பது போல் வந்தது கொத்தை கொண்டுவந்து ஆட்டுதலைக்கு பக்கத்தில் போடத்தான். இப்போது அந்த செடியின் நாற்றம் ஆட்டுதலையின் உள்ளே தூங்கும் தவளைக்கு தொந்தரவாகி கத்தத் தொடங்கும். அப்போதுதான், மந்திரவ்வதி தலையை வெட்டி யாரும் தவளையை கண்டு விடக் கூடாது என்பதற்காக உடனே தண்ணீரில் தூக்கி எறிந்து விடுவான். இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும், கூட போனவர்களுக்கு ஆடு கத்துவதற்கும் தவளை கத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதா என்று, அதற்க்கு காரணம் உண்டு, தவளைக்கும் ஆட்டுக்கும் சத்தத்தில் கூர்ந்து கேட்டால் தான் வித்தியாசம் விளங்கும், மற்றது அவ்வாறு கூர்ந்து கேட்க முடியாத வாறு தான் மந்திரவாதி  சிங்கம் புலி கரடி விட்டு பயமுறுத்தி வெச்சிருக்கானே, அப்புறம்  எப்படி விளங்கும்.

இப்படித்தான் மக்களே நம்மை ஏமாத்துறாங்க, உண்மையில் வெட்டிய ஆட்டுத்தலை கத்துவது என்பது உலக மகா அதிசயம். அதை ஒருவன் கண்முன்னே செய்து காட்டினால் அவன் நமக்கு கடவுளாக தான் தெரிவான்.

இன்னும் வரும் - 

முந்தைய பாகத்திக்கு :பாகம் 01 பாகம் 02 பாகம் 03


Wednesday, June 11, 2014

வண்ணமான   ஊரும்,
திண்ணமான வாழ்வும், 
மங்காத எம் தமிழு,ம் 
மாறது பெற்ற வேதமும், 
கசடறக் கற்ற கல்வியுமாய், 
நெறிப் பட்டிருந்தோம், 
ஒரு தாய் மக்களாக.....

மேற்கில் சோறு விளையும் சேறும் ,
கிழக்கில் வங்கத் தாய் பொக்கிசமும், 
தெற்கில் வெட்டியுண்ணும் தயிரும், 
வடக்கில் பச்சைகள் யாவும், 
ஊடறுத்து ஓடும் ஆறும் ,
என்ன குறை கண்டோம் ,
எங்கள் மண்ணில்....



ஊருக்கு கல்விக்கு சாலை, 
நாட்டுக்கு சோத்துக்கு ஆலை, 
என்று, வாரி வழங்கி, 
யாவரையும் வளப்படுத்தி, 
நாமும் வளப்பட்டோம்... 

வேரில் ஊற்றிய வெந்நீராய், 
தீயோர் கொண்ட 
தனியாத செயலால் 
யுத்தம் எனும் வன்முறை கொண்டு.
சிதறித்தான் போனோமே!!!
சிந்திக்க மறந்தோமே!!!



தோளில் ஒரு கையும்,
இடுப்பில் ஒரு கையுமாய்,
உயிராய் உறவாடிய,
கண்ணனும் ,காதரும்
இன்றும் சந்திக்கும் வேளையில்,
பார்த்து சிந்திக்கையில்,
இடுப்பையும் கையையும்
ஆயுதம் கொண்டவனோ,
கொல்லத்தான் வந்தவனோ

எங்களுக்கு என்னாச்சு??
சர்வமும் போயாச்சு....
தூரத்தில் தெரியும் ஒளி
வரும் போது வரட்டும்.....
மெழுகுவர்த்தி போதும்
எங்கள் உண்மை முகம் காண...



Tuesday, June 10, 2014

நினைவுகள் மட்டும்......!

பறந்து சென்றாலும் 
விரைந்து மறைந்தாலும் 
என் எண்ணங்களும் 
உன் நினைவுகளும் 
கூடவே பயணிக்கும்......!

நாற்திசையில் எத்திசையோ 
செலுத்தியது எவ்விசையோ 
ஏதொன்றும் அறியேன் 
தொடரும் வழி புரியேன்........!!

கண்காணா தூரத்தில் 
பொழுதறியா நேரத்தில் 
தனிமையில் நீயும் 
வெறுமையில் நானும்.....!!!

எனக்கும் உனக்கும் 
கூடவே நம்காதலுக்கும் 
உரமாகவும் வரமாகவும் 
இறுதிவரை வருவது 
நினைவுச் சிதறல்களே குட்டிம்மா........!!!!






காதலுக்கும் ஆன்மாவிற்கும்.......!


போகிற போக்கில் 
நீ வீசிடும் வார்த்தைகள் 
உனக்கு களிப்பாகலாம் 
உன் மனதை செழிப்பக்கலாம்.......!

நான் கேட்கின்ற  வாக்கில் 
நீ வீசிய வார்த்தைகள் 
என் நெஞ்சை கிழிக்கிறது 
புத்தியையும் தைக்கிறது........!!

தினந்தோறும் சித்திரவதை 
என் காதலால் முடியும் 
ஆன்மாவால் முடியவில்லை 
என் காதலுக்கும் ஆன்மாவிக்கும் 
என்ன பதில் சொல்ல குட்டிம்மா..........!!!


Wednesday, June 4, 2014

பிரிவோடு............!

பிரிவதாக சொல்லிவிட்டு 
இன்னும் என்னுள் 
உறைந்து கிடக்கிறாய் 
உன் நினைவுகளை விட்டு
என்னை அசைய விடாமல்..........!

இது தற்காலிகம் என்றாலும் 
சித்திரவதை கூடத்தில் 
வதை படுகிறேன் 
கைதியாக நான் 
உறைந்து கிடக்கும் 
உன் நினைவுகள் 
எனும் விலங்கோடு .......!

நம்ப முடியவில்லை 
விலங்கும் நானே 
போட்டுக்கொண்டேன் 
சித்திரவதை கூடத்தில் 
எனை நானே ஆளாக்கினேன்..........!

காவலுக்கும் ஆளில்லை 
தப்பிக்கவும் பிரியமில்லை 
இப்படியே போகட்டும் 
கடைசிவரை குட்டிம்மா...........!







மகிழ்வோடு.....! 

உனக்காய் காத்திருந்தும் 
கண்கள் பூத்திருந்தும் 
நீ வரவில்லை...........!

என் கோபம் மேலாடியும் 
உன் மீது வழிந்தோடியும் 
நீ வரவில்லை...........!

நிமிடங்கள் கரைந்து போக 
பொழுதும் விரைந்து ஏக 
நீ வரவில்லை...........!

நெஞ்சம் தவிதவிக்க 
உன் எண்ணம் பரிதவிக்க 
நீ வரவில்லை...........!

இத்தனை எனை ஆட்கொண்டும் 
சித்தனைப்போல் கால் கொண்டும் 
நீ வரவில்லை...........!

பகலவனை கண்ட 
பனித்துளி அறியேன் 
தாயினைக் கண்ட 
மழலையின் மகிழ்ச்சி அறியேன் 
தேன் மலர் கண்ட 
வண்டின் மனம் கூட அறியேன் 
அத்தனையும் உணர்ந்து கொண்டேன் 
தாமதித்தில் நீ கேட்ட 
மன்னிப்பில் குட்டிம்மா..........!

Monday, June 2, 2014

முந்தைய பாகத்தில் மந்திரவாதிகள் நம்மையும் நம் இடத்திலும் பேய் பிசாசுகளை அடையாளம் காணுவதிலும் அதை உறுதிப்படுத்துவதிலும் நம்மை எப்படி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் என்று பார்த்தோம். இனி அப்படி அடையாளம்(?) காணப்பட்ட பேய் அல்லது பிசாசை விரட்டுகிறேன் பேர்வழி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் நம்மை பிடித்த பேய் பிசாசு பற்றி மந்திரவாதி கொடுப்பார் பாருங்க விளக்க வெண்ணை ஒண்ணு மதிமயங்கி போயிடுவோம், அது ஏன் வந்தது, நம்மை ஏன் பிடித்தது, அதற்க்கு இப்போ என்ன வேணும், எப்படி விரட்டுவது என்று அள்ளி விடுவாரு பாருங்க ஏதோ அவருதான் அதை வளர்த்து நம்ம மேல ஏவி விட்டவர் மாதிரி இருக்கும். அப்புறம் அதை விரட்ட ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம கையில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பார், அதில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏன் வாங்க சொன்னார் என்று நமக்கும் புரியாது அவருக்கும் தெரியாது. இருந்தாலும் வாங்கி வைப்போம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த மாந்திரிகத்திக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஓன்று ரெண்டு பொருட்கள் நம்மை வாங்க சொல்ல மாட்டார் அவரே வாங்கிக் கொள்வதாக் சொல்லி அதற்கும் வேறையாக நம்மிடம் பணத்தை ஆட்டையப் போட்டு விடுவார். இப்படி பேய் விரட்டுவதற்கு பல முறைகள் இருந்தாலும் உதாரணத்திக்கு ஒரு முறையை பார்ப்போம்.

குறித்த நாளில் நம் வீட்டிற்க்கு வரும் மந்திரவாதி, மந்திர வேலைகளுக்கு உரிய ஆயத்தங்களை செய்து விட்டு, பாதிக்கப் பட்டவரை அவ்விடத்தில் தன் முன்னால் வைத்து நாலு மணி நேரம் மந்திரம் சொல்லி பாதிக்கப் பட்டவரை படுத்தும் பாடு இருக்கே, உண்மையில் பேய் இருந்தால் கூட அப்படி ஒரு சித்திரவதை பண்ணி இருக்குமா என்பது சந்தேகேமே. இதையெல்லாம் முடித்து விட்டு கிளைமாக்ஸ் ஆரம்பமாகும். ஒரு நன்றாக சீவி எடுக்கப்பட்ட தேங்காய் சிரட்டை (இந்த சிரட்டைதான் நம் வீடும் நம் இடமும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார்) ஒன்றில் மந்திரவாதி "மந்திரித்து" கொண்டு வந்த ஏழு சுண்ணாம்பு சிப்பிகளை    போடுவார் (மூன்று, ஏழு, பதினொன்று என்ன கணக்கு என்று அவர்களுக்கும் தெரியாது), அதுதான் நம் வீட்டில் உள்ள பேய்கள் என்று விளக்கம் வேறு. பின் அவரே கொண்டுவந்த மந்திர தண்ணியை அதனுள் ஊற்றி (அதுதான் அவரது மந்திர சக்தியாம்) மந்திரம் சொல்ல தொடங்குவார். இப்போது மந்திரம் உச்சத்தை அடையும். இந்த நேரத்தில் சிரட்டையினுள் இருக்கும் சிப்பிகள் மெதுவாக ஒவ்வொன்றாக தானாக வெளியேறத் தொடங்கும். எல்லாம் வெளியேறி முடிந்தவுடன் மந்திரவாதி முகத்தை பார்க்கவேண்டும். மலையைப் பிளந்த பெருமிதம் தெரியும். நமக்கு சர்வமும் ஒடுங்கிப் போய் அவர் தெய்வமாக தெரிவார். பின் அவருக்கு உரியதை பயபக்தியோடு கொடுத்து வழியனுப்பி வைப்போம்.

உண்மையில் ஒரு பாத்திரம் போன்ற ஒன்றில் இருந்து உள்ளே போடப்பட்ட ஒரு சடப் பொருள் தானாக அசைந்து வெளியேறினால் அதற்கு காரணமானவனை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல. இங்கு  நடந்தது இதுதான், சிப்பிகள் உண்மையானவை, அதில் எந்த மாற்றமும் இல்லை, தேங்காய் சிரட்டையும் உண்மையானது அதிலும் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஏமாற்று வித்தை இருப்பது மந்திரவாதி கொண்டு வந்த மந்திர தண்ணியில் தான், அது மந்திர தண்ணி அல்ல, பேட்டரி அசிட், பள்ளியில் விஞ்ஞான பாடத்தை ஒழுங்காக படித்தோருக்கு இப்போது விளங்கி இருக்கும். சுண்ணாம்பு சிப்பி ஒரு காரம், பேட்டரி அசிட் ஒரு அமிலம். எப்போதும் இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது, அதிலும் சுண்ணாம்பு சிப்பி பலகீனமானது. அதனால் தான் பேட்டரி அசிட் தாக்கம் தாங்காமல் தானாக நகரத் தொடங்கும். அனால் இங்கு தேங்காய் சிரட்டை எடுத்ததன் காரணம், வேறு பாத்திரத்தில் இதனை செய்தால் காரமோ அமிலமோ அதனுடன் தாகம் புரிந்து மந்திரவாதிக்கு தேவையான பெறுபேறு கிடைக்காமல் போகலாம் என்பதால் தான்.

இப்போது உங்கள் வீட்டில் உள்ள உங்களை பிடித்த பேயினை விரட்டி ஆகிவிட்டது. அத்தோடு போச்சா திரும்ப வந்தால், அதனால் அடுத்த பதிவில் திரும்ப வராமல் எப்படி காவல் செய்வது என்று பார்ப்போம்.

-தொடரும் 

முந்தைய பாகத்திக்கு : பாகம் 01   பாகம் 02

Sunday, June 1, 2014

எனது நண்பர் வாய்ப்பாட்டு அவர்களின் முகப் பக்கத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த சொல்லாடல், அவரின் தமிழ் வியக்க வைத்த ஒன்று. என் தமிழ் புடம் போடப் பட்டதும் அவரிடம்தான்.


வாய்ப்பாட்டு:

விடை தெரிந்த கேள்வியது 
வாழ்க்கை வழியில்தான் 
எத்தனை எத்தனை பாடங்கள் 
எழுதியும் எழுதாததுமான 
எத்துணை  எத்துணை  தேர்வுகள் 
தேர்ந்தாலும் தோற்றாலும் 
அத்தனைக்கும் ஒரே விடைதான் 
அது அனைவரும் அறிந்த விடைதான் 
ஆனாலும் பாடங்கள் படித்த வண்ணமும் 
தேர்வுகள் எழுதிய வண்ணமுமாய் 
மனிதன் விடை தெரிந்த கேள்விக்கு 


ஒண்ணும் தெரியாதவன்:

தெரிந்த விடையை பகுத்தரியாவிட்டால் 
தேர்வில் தோல்விதான் 
விடை தெரிந்த கேள்விக்கு 


வாய்ப்பாட்டு:

என்னதான் பகுத்தாலும் அறிந்தாலும் 
அல்லது அரிந்து பகுத்தாலும் 
விடையத்தை கேள்வியிலேயே தெளிவாக வைத்து 
கேள்வியிலேயே நம்மை வைத்து 
தேடிக்கொண்டிருப்பதிலேயே 
காலத்தை நகர்த்தும் நாயகன் அவன் 
உறவும் துறவுமாய் வாழ்வில் உழன்று மருண்டு
பதிலிருந்தும் கேள்வியிலேயே முடிந்து போகும் வாழக்கை


ஒண்ணும் தெரியாதவன்:

நாயகனை பகுத்தறியா பகுத்தறிவில் 
நாயகன் வைத்த கேள்வியை பகுத்தறிந்து 
விடையறிவதை நாயகனே அறிவான் 


வாய்ப்பாட்டு:

எல்லாம் அறிந்த ஏகன் அவன் 
இனி ஒன்றை அறிய இனி ஒன்றும் இல்லை 
எங்கும் அறிந்தொழுகவேண்டி அவன் தந்த பகுத்தறிவு 
அவனை அளக்க முற்படின் 
எதையளக்க அறிவுதந்தானோ 
அதை மறந்து ஏற்றம் தரும் 
உபயம் தொறந்து எது கேள்வி என்று அறியா 
எல்லாமே கேள்வியாகவே 
தொக்கி நிற்கும் தொவியாகும் வாழ்வு 


ஒண்ணும் தெரியாதவன்:

மனைவி மக்கள் 
உற்றம் சுற்றம் 
நட்பு துரோகம் 
கூடவே தன்னையும் முழுமையாக 
பகுத்தறிய முடியா பகுத்தறிவினை கொண்டு 
இவையனைத்தையும் ஆட்டுவிக்கும் 
ஏகனை பகுத்தறிய முற்படின் 
ஏற்றம் உண்டோ 
இம்மை மறுமை வாழ்வில் 



கண்ணை மூடிக்கொண்டு 
தியானம் அல்ல என் தத்துவம் 
கேள்வியை வைத்து 
பதில் தேட சொல்லும் மார்க்கம் 
ஊர் உறவு சுற்றம் எல்லாம் சூழ்ந்து நின்று 
நீ தனித்த பின் 
என்ன இருக்கிறது எங்கே இருக்கிறாய் யார் நீ 
என்ற கேள்விக்கு
விடை தேட சொல்லும் வலி அது 



மார்க்கம் சொல்லும் வழியை 
பகுத்தறியா மூடர் வாழும் அவனியில் 
சரியான பாதைக்கு 
சரியான பகுத்தறிவாளர் என 
பகுத்தறிய முடியாதோர்க்கு 
மார்க்கம் என்ன 



ஒற்றையானோம் என்றில்லாமல் 
அடுத்தவர்க்கு எடுத்தோதுவதே 
உயர்ந்த பணி என்று 
படைத்தவன் பணித்ததை 
கொண்டு செல்வதே பகுத்தறிவு 



இருட்டில் இருக்கும் பாமரனுக்கு 
ஏகனே கலங்கரை விளக்கு 


இன்னும் வரும்...........!

இந்த சொல்லாடல் இடம் பெற்ற முகப் பக்கத்திக்கு 

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!