Thursday, July 10, 2014

பரவசமானேன்



காட்டாமல் மறைத்தாலும்
செல்லமாக காயப்படுத்தினாலும்
நாணந்தான் தடுத்தாலும்
நுகர்ந்து சுவாசிக்கிறேன்
உன் அன்பை........!!


பேசியதும் தெளிவில்லை
பேசாததும் தெரியவில்லை 
மவுனமும் புரியவில்லை
அறியவும் வழியுமில்லை...!!


தாங்காமல் தவிக்கிறேன்
அனல்புழுவாய் தெறிக்கிறேன்
கனவினையும் அழிக்கிறேன்
உன் வார்த்தை பார்த்தே 
கண்கள் பனிக்கிறேன்.....!!


என் வசந்தம் 
வந்து கொண்டிருக்கிறது
வந்தால்தான் தெரியும்
தென்றலா புயலா என்று...?
எதுவாக இருந்தாலும் 
என் சுவாசம் நேர்படும்
அது போதும் எனக்கு.....!!


நீ பேசுகின்ற 
ஒவ்வொரு வார்த்தையும் 
தேனாக இனிக்கிறது 
நீ கோபத்தில்
திட்டுவதையும் சேர்த்து
உன் கோபம் கூட 
என்னிடம்தான் என்பதால் ...!!


புரியாமல் பிரிவதும்
புரிந்த பின் நாணுவதும்
நாணத்துடன் சேர்வதும்
ஊடலின் அழகே.......!!


என் கர்வம் எல்லாம் 
உன் முன்னால்
தகர்ந்து விட்டது
உன் அன்புதான் உயர்ந்தது
ஒத்துக் கொள்கிறேன்
தோல்வியை பெருமையாக..!!


கண்டதும் பரவசமானேன்
பார்த்ததால் அல்ல
தூண்டிய அன்பினால்....!!

1 comment:


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!