Tuesday, June 10, 2014

நினைவுகள் மட்டும்......!

பறந்து சென்றாலும் 
விரைந்து மறைந்தாலும் 
என் எண்ணங்களும் 
உன் நினைவுகளும் 
கூடவே பயணிக்கும்......!

நாற்திசையில் எத்திசையோ 
செலுத்தியது எவ்விசையோ 
ஏதொன்றும் அறியேன் 
தொடரும் வழி புரியேன்........!!

கண்காணா தூரத்தில் 
பொழுதறியா நேரத்தில் 
தனிமையில் நீயும் 
வெறுமையில் நானும்.....!!!

எனக்கும் உனக்கும் 
கூடவே நம்காதலுக்கும் 
உரமாகவும் வரமாகவும் 
இறுதிவரை வருவது 
நினைவுச் சிதறல்களே குட்டிம்மா........!!!!






காதலுக்கும் ஆன்மாவிற்கும்.......!


போகிற போக்கில் 
நீ வீசிடும் வார்த்தைகள் 
உனக்கு களிப்பாகலாம் 
உன் மனதை செழிப்பக்கலாம்.......!

நான் கேட்கின்ற  வாக்கில் 
நீ வீசிய வார்த்தைகள் 
என் நெஞ்சை கிழிக்கிறது 
புத்தியையும் தைக்கிறது........!!

தினந்தோறும் சித்திரவதை 
என் காதலால் முடியும் 
ஆன்மாவால் முடியவில்லை 
என் காதலுக்கும் ஆன்மாவிக்கும் 
என்ன பதில் சொல்ல குட்டிம்மா..........!!!


6 comments:

  1. கடல் கடந்திருக்கும் காதலின் வரமும், சாபமும்

    ReplyDelete
  2. நன்றி சகோ, சகோ வரவிற்கும் கருத்திற்கும்

    ReplyDelete
  3. ண்ணா...... பாகம் 1 போட்டா, பாகம் 2-ம் போடனும்ணா.....

    ReplyDelete
  4. எதை பன்னிக்குட்டியாரே

    ReplyDelete
  5. நறுக்கு தெறித்தார் போல் வரிகள் இருக்கின்றன ..

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!