Sunday, March 15, 2015







நேற்றிரவும்  ஒரு கனவு 
நான்  மரணித்து விட்டதாக
என்  உடலில்  இருந்து 
உயிர் வெளியே  இழுக்கப்பட்டு
பிய்த்து  எறியப்பட்டது
வலியும்  கதறலுமாய் 
செய்வதறியாது நான்.........!


உற்றமும்  சுற்றமும்
கூடி நின்று  அழுதார்கள்
விரைவில்  மறந்து  விடுவார்கள்
அவரவர் அன்பிற்கேற்ப
நாட்களில்  வாரங்களில்
மாதங்களில்  வருடங்களில்
எனக்கு  மட்டும் ...............??


காரியங்கள்  ஆகின
கடமைகள்  தொடர்ந்தன
குளிப்பாட்டி  வெள்ளாடை
அணிவிக்கப்  பட்டு கிடத்தப்பட்டேன்
கூடவே  பொய்யான 
புகழ் மாலைகளும் அதிகப்படியாக 
கடைசியில் நடந்தே  விட்டது 
அந்த  நாலு  பேரும்......!!!




மரணக்  குழிக்குள்
தள்ளியே  விட்டனர்
உள்ளே நானும்  என் உடலும்
இருட்டு  தனிமை  வெம்மை 
தனித்  தனியாக  கண்டவை
புதுமையாக  ஒன்றாக 
ஆனாலும்  தாங்க முடியாதவாறும்
மீள  முடியாதவாறும்.....!!!!


துர்நாற்றமும்  கூடவே
ஊனமும்  வழிந்தோடியது
என்னில்  இருந்து
எனக்கே  சகிக்காதவாறு
எனக்குள்ளே  என்னையறியாமல்
நான்  வளர்த்த "லார்வாக்கள்"
என்னை  தின்று  முடிக்க
தீராத  பசியுடன்
என்னை  சுற்றி.......!!!!!


சட்டென  விழித்ததில்
தடுமாறிப்  போனேன்
சுற்றும்  முற்றும்  பார்த்தேன்
எனது  அறைதான் 
உற்று  நோக்கினால்  எங்கெங்கினும் 
அழகுசாதனங்கள் முத்திரை  ஆடைகள்
நவீனத்தால்  இறைந்து  இருந்தது
நாளைய  நிகழ்வுகளுக்கு  
திட்டம் தீட்டியபடி  
மீண்டும்  உறக்கத்தில்  நான்.......!!!!!!















3 comments:

  1. கனவும் சொல்லும்சிலநேரத்தில்சில நிஜத்தை.கவிதை அருமை.

    ReplyDelete
  2. நிஜத்தை நிழல் சொன்ன விதம் மிக அருமை தோழறே

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!