Thursday, July 10, 2014


மதங்களின் சாத்வீகமும்
மனித நற்பண்புகளும்
கழுத்து நெரிக்கப் பட்டு
பிணங்களோடு பிணங்களாக
அடுக்கப் படுகின்றன
ஒன்றாக...!

ஏற்றப் பட்ட வெள்ளைக்கொடி
இறக்கப்பட்டு கிழிக்கப்பட்டு
போர்த்துகின்றன அவற்றை
பறக்கவிடப் பட வேண்டிய
சமாதனப் புறா 
சட்டியில் கொதிக்கிறது 
இழவுவீட்டு விருந்தாக...!!


எண்ணிக்கையும் போதாது 
எண்ணியதும் தேறாது
என்றதும் பொங்கினர்
கொன்று போட்ட 
மதத்தையும் மனிதத்தையும் 
கூறுபோட்டு விற்க...!!!

எண்ணியதுவும் வேண்டியதுவும்
எல்லையின்றி கிடைத்ததுவும்
கோர முகத்தை மறைக்க 
மத இன முகமூடி மீண்டும்
சாத்தான்கள் வேதத்தை
 தூசு தட்டுகின்றன
நம்பிய பாமரன் மட்டும் 
இன்னும் பிளவுக்குள் 
மீள முடியாமல்...!!!!





9 comments:

  1. உண்மைதான் நீங்க சொல்வது..

    ReplyDelete
  2. எண்ணியதுவும் வேண்டியதுவும்
    எல்லையின்றி கிடைத்ததுவும்
    கோர முகத்தை மறைக்க
    மத இன முகமூடி மீண்டும்
    சாத்தான்கள் வேதத்தை
    தூசு தட்டுகின்றன
    நம்பிய பாமரன் மட்டும்
    இன்னும் பிளவுக்குள்
    மீள முடியாமல்...!!!!//


    //

    ரொம்ப சரி...

    ReplyDelete
  3. இன்டிலியில் இணைத்துவிட்டேன் .

    ReplyDelete
  4. மதத்திற்கு மதம் பிடித்தால் அழிவுதான்...அன்பு பரவ வேண்டும் மதம் பிடித்த இந்த மனிதர்கள் மீது.

    ReplyDelete
    Replies
    1. அதைக்கூட போலியாக்கி விட்டார்களே

      Delete
  5. இன்றைய நிலையை தோலுரிக்கும் கவிதை! அருமை!

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!