Wednesday, June 11, 2014

வண்ணமான   ஊரும்,
திண்ணமான வாழ்வும், 
மங்காத எம் தமிழு,ம் 
மாறது பெற்ற வேதமும், 
கசடறக் கற்ற கல்வியுமாய், 
நெறிப் பட்டிருந்தோம், 
ஒரு தாய் மக்களாக.....

மேற்கில் சோறு விளையும் சேறும் ,
கிழக்கில் வங்கத் தாய் பொக்கிசமும், 
தெற்கில் வெட்டியுண்ணும் தயிரும், 
வடக்கில் பச்சைகள் யாவும், 
ஊடறுத்து ஓடும் ஆறும் ,
என்ன குறை கண்டோம் ,
எங்கள் மண்ணில்....



ஊருக்கு கல்விக்கு சாலை, 
நாட்டுக்கு சோத்துக்கு ஆலை, 
என்று, வாரி வழங்கி, 
யாவரையும் வளப்படுத்தி, 
நாமும் வளப்பட்டோம்... 

வேரில் ஊற்றிய வெந்நீராய், 
தீயோர் கொண்ட 
தனியாத செயலால் 
யுத்தம் எனும் வன்முறை கொண்டு.
சிதறித்தான் போனோமே!!!
சிந்திக்க மறந்தோமே!!!



தோளில் ஒரு கையும்,
இடுப்பில் ஒரு கையுமாய்,
உயிராய் உறவாடிய,
கண்ணனும் ,காதரும்
இன்றும் சந்திக்கும் வேளையில்,
பார்த்து சிந்திக்கையில்,
இடுப்பையும் கையையும்
ஆயுதம் கொண்டவனோ,
கொல்லத்தான் வந்தவனோ

எங்களுக்கு என்னாச்சு??
சர்வமும் போயாச்சு....
தூரத்தில் தெரியும் ஒளி
வரும் போது வரட்டும்.....
மெழுகுவர்த்தி போதும்
எங்கள் உண்மை முகம் காண...



Tuesday, June 10, 2014

நினைவுகள் மட்டும்......!

பறந்து சென்றாலும் 
விரைந்து மறைந்தாலும் 
என் எண்ணங்களும் 
உன் நினைவுகளும் 
கூடவே பயணிக்கும்......!

நாற்திசையில் எத்திசையோ 
செலுத்தியது எவ்விசையோ 
ஏதொன்றும் அறியேன் 
தொடரும் வழி புரியேன்........!!

கண்காணா தூரத்தில் 
பொழுதறியா நேரத்தில் 
தனிமையில் நீயும் 
வெறுமையில் நானும்.....!!!

எனக்கும் உனக்கும் 
கூடவே நம்காதலுக்கும் 
உரமாகவும் வரமாகவும் 
இறுதிவரை வருவது 
நினைவுச் சிதறல்களே குட்டிம்மா........!!!!






காதலுக்கும் ஆன்மாவிற்கும்.......!


போகிற போக்கில் 
நீ வீசிடும் வார்த்தைகள் 
உனக்கு களிப்பாகலாம் 
உன் மனதை செழிப்பக்கலாம்.......!

நான் கேட்கின்ற  வாக்கில் 
நீ வீசிய வார்த்தைகள் 
என் நெஞ்சை கிழிக்கிறது 
புத்தியையும் தைக்கிறது........!!

தினந்தோறும் சித்திரவதை 
என் காதலால் முடியும் 
ஆன்மாவால் முடியவில்லை 
என் காதலுக்கும் ஆன்மாவிக்கும் 
என்ன பதில் சொல்ல குட்டிம்மா..........!!!


Wednesday, June 4, 2014

பிரிவோடு............!

பிரிவதாக சொல்லிவிட்டு 
இன்னும் என்னுள் 
உறைந்து கிடக்கிறாய் 
உன் நினைவுகளை விட்டு
என்னை அசைய விடாமல்..........!

இது தற்காலிகம் என்றாலும் 
சித்திரவதை கூடத்தில் 
வதை படுகிறேன் 
கைதியாக நான் 
உறைந்து கிடக்கும் 
உன் நினைவுகள் 
எனும் விலங்கோடு .......!

நம்ப முடியவில்லை 
விலங்கும் நானே 
போட்டுக்கொண்டேன் 
சித்திரவதை கூடத்தில் 
எனை நானே ஆளாக்கினேன்..........!

காவலுக்கும் ஆளில்லை 
தப்பிக்கவும் பிரியமில்லை 
இப்படியே போகட்டும் 
கடைசிவரை குட்டிம்மா...........!







மகிழ்வோடு.....! 

உனக்காய் காத்திருந்தும் 
கண்கள் பூத்திருந்தும் 
நீ வரவில்லை...........!

என் கோபம் மேலாடியும் 
உன் மீது வழிந்தோடியும் 
நீ வரவில்லை...........!

நிமிடங்கள் கரைந்து போக 
பொழுதும் விரைந்து ஏக 
நீ வரவில்லை...........!

நெஞ்சம் தவிதவிக்க 
உன் எண்ணம் பரிதவிக்க 
நீ வரவில்லை...........!

இத்தனை எனை ஆட்கொண்டும் 
சித்தனைப்போல் கால் கொண்டும் 
நீ வரவில்லை...........!

பகலவனை கண்ட 
பனித்துளி அறியேன் 
தாயினைக் கண்ட 
மழலையின் மகிழ்ச்சி அறியேன் 
தேன் மலர் கண்ட 
வண்டின் மனம் கூட அறியேன் 
அத்தனையும் உணர்ந்து கொண்டேன் 
தாமதித்தில் நீ கேட்ட 
மன்னிப்பில் குட்டிம்மா..........!

Monday, June 2, 2014

முந்தைய பாகத்தில் மந்திரவாதிகள் நம்மையும் நம் இடத்திலும் பேய் பிசாசுகளை அடையாளம் காணுவதிலும் அதை உறுதிப்படுத்துவதிலும் நம்மை எப்படி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் என்று பார்த்தோம். இனி அப்படி அடையாளம்(?) காணப்பட்ட பேய் அல்லது பிசாசை விரட்டுகிறேன் பேர்வழி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் நம்மை பிடித்த பேய் பிசாசு பற்றி மந்திரவாதி கொடுப்பார் பாருங்க விளக்க வெண்ணை ஒண்ணு மதிமயங்கி போயிடுவோம், அது ஏன் வந்தது, நம்மை ஏன் பிடித்தது, அதற்க்கு இப்போ என்ன வேணும், எப்படி விரட்டுவது என்று அள்ளி விடுவாரு பாருங்க ஏதோ அவருதான் அதை வளர்த்து நம்ம மேல ஏவி விட்டவர் மாதிரி இருக்கும். அப்புறம் அதை விரட்ட ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம கையில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பார், அதில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏன் வாங்க சொன்னார் என்று நமக்கும் புரியாது அவருக்கும் தெரியாது. இருந்தாலும் வாங்கி வைப்போம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த மாந்திரிகத்திக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஓன்று ரெண்டு பொருட்கள் நம்மை வாங்க சொல்ல மாட்டார் அவரே வாங்கிக் கொள்வதாக் சொல்லி அதற்கும் வேறையாக நம்மிடம் பணத்தை ஆட்டையப் போட்டு விடுவார். இப்படி பேய் விரட்டுவதற்கு பல முறைகள் இருந்தாலும் உதாரணத்திக்கு ஒரு முறையை பார்ப்போம்.

குறித்த நாளில் நம் வீட்டிற்க்கு வரும் மந்திரவாதி, மந்திர வேலைகளுக்கு உரிய ஆயத்தங்களை செய்து விட்டு, பாதிக்கப் பட்டவரை அவ்விடத்தில் தன் முன்னால் வைத்து நாலு மணி நேரம் மந்திரம் சொல்லி பாதிக்கப் பட்டவரை படுத்தும் பாடு இருக்கே, உண்மையில் பேய் இருந்தால் கூட அப்படி ஒரு சித்திரவதை பண்ணி இருக்குமா என்பது சந்தேகேமே. இதையெல்லாம் முடித்து விட்டு கிளைமாக்ஸ் ஆரம்பமாகும். ஒரு நன்றாக சீவி எடுக்கப்பட்ட தேங்காய் சிரட்டை (இந்த சிரட்டைதான் நம் வீடும் நம் இடமும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார்) ஒன்றில் மந்திரவாதி "மந்திரித்து" கொண்டு வந்த ஏழு சுண்ணாம்பு சிப்பிகளை    போடுவார் (மூன்று, ஏழு, பதினொன்று என்ன கணக்கு என்று அவர்களுக்கும் தெரியாது), அதுதான் நம் வீட்டில் உள்ள பேய்கள் என்று விளக்கம் வேறு. பின் அவரே கொண்டுவந்த மந்திர தண்ணியை அதனுள் ஊற்றி (அதுதான் அவரது மந்திர சக்தியாம்) மந்திரம் சொல்ல தொடங்குவார். இப்போது மந்திரம் உச்சத்தை அடையும். இந்த நேரத்தில் சிரட்டையினுள் இருக்கும் சிப்பிகள் மெதுவாக ஒவ்வொன்றாக தானாக வெளியேறத் தொடங்கும். எல்லாம் வெளியேறி முடிந்தவுடன் மந்திரவாதி முகத்தை பார்க்கவேண்டும். மலையைப் பிளந்த பெருமிதம் தெரியும். நமக்கு சர்வமும் ஒடுங்கிப் போய் அவர் தெய்வமாக தெரிவார். பின் அவருக்கு உரியதை பயபக்தியோடு கொடுத்து வழியனுப்பி வைப்போம்.

உண்மையில் ஒரு பாத்திரம் போன்ற ஒன்றில் இருந்து உள்ளே போடப்பட்ட ஒரு சடப் பொருள் தானாக அசைந்து வெளியேறினால் அதற்கு காரணமானவனை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல. இங்கு  நடந்தது இதுதான், சிப்பிகள் உண்மையானவை, அதில் எந்த மாற்றமும் இல்லை, தேங்காய் சிரட்டையும் உண்மையானது அதிலும் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஏமாற்று வித்தை இருப்பது மந்திரவாதி கொண்டு வந்த மந்திர தண்ணியில் தான், அது மந்திர தண்ணி அல்ல, பேட்டரி அசிட், பள்ளியில் விஞ்ஞான பாடத்தை ஒழுங்காக படித்தோருக்கு இப்போது விளங்கி இருக்கும். சுண்ணாம்பு சிப்பி ஒரு காரம், பேட்டரி அசிட் ஒரு அமிலம். எப்போதும் இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது, அதிலும் சுண்ணாம்பு சிப்பி பலகீனமானது. அதனால் தான் பேட்டரி அசிட் தாக்கம் தாங்காமல் தானாக நகரத் தொடங்கும். அனால் இங்கு தேங்காய் சிரட்டை எடுத்ததன் காரணம், வேறு பாத்திரத்தில் இதனை செய்தால் காரமோ அமிலமோ அதனுடன் தாகம் புரிந்து மந்திரவாதிக்கு தேவையான பெறுபேறு கிடைக்காமல் போகலாம் என்பதால் தான்.

இப்போது உங்கள் வீட்டில் உள்ள உங்களை பிடித்த பேயினை விரட்டி ஆகிவிட்டது. அத்தோடு போச்சா திரும்ப வந்தால், அதனால் அடுத்த பதிவில் திரும்ப வராமல் எப்படி காவல் செய்வது என்று பார்ப்போம்.

-தொடரும் 

முந்தைய பாகத்திக்கு : பாகம் 01   பாகம் 02

Sunday, June 1, 2014

எனது நண்பர் வாய்ப்பாட்டு அவர்களின் முகப் பக்கத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த சொல்லாடல், அவரின் தமிழ் வியக்க வைத்த ஒன்று. என் தமிழ் புடம் போடப் பட்டதும் அவரிடம்தான்.


வாய்ப்பாட்டு:

விடை தெரிந்த கேள்வியது 
வாழ்க்கை வழியில்தான் 
எத்தனை எத்தனை பாடங்கள் 
எழுதியும் எழுதாததுமான 
எத்துணை  எத்துணை  தேர்வுகள் 
தேர்ந்தாலும் தோற்றாலும் 
அத்தனைக்கும் ஒரே விடைதான் 
அது அனைவரும் அறிந்த விடைதான் 
ஆனாலும் பாடங்கள் படித்த வண்ணமும் 
தேர்வுகள் எழுதிய வண்ணமுமாய் 
மனிதன் விடை தெரிந்த கேள்விக்கு 


ஒண்ணும் தெரியாதவன்:

தெரிந்த விடையை பகுத்தரியாவிட்டால் 
தேர்வில் தோல்விதான் 
விடை தெரிந்த கேள்விக்கு 


வாய்ப்பாட்டு:

என்னதான் பகுத்தாலும் அறிந்தாலும் 
அல்லது அரிந்து பகுத்தாலும் 
விடையத்தை கேள்வியிலேயே தெளிவாக வைத்து 
கேள்வியிலேயே நம்மை வைத்து 
தேடிக்கொண்டிருப்பதிலேயே 
காலத்தை நகர்த்தும் நாயகன் அவன் 
உறவும் துறவுமாய் வாழ்வில் உழன்று மருண்டு
பதிலிருந்தும் கேள்வியிலேயே முடிந்து போகும் வாழக்கை


ஒண்ணும் தெரியாதவன்:

நாயகனை பகுத்தறியா பகுத்தறிவில் 
நாயகன் வைத்த கேள்வியை பகுத்தறிந்து 
விடையறிவதை நாயகனே அறிவான் 


வாய்ப்பாட்டு:

எல்லாம் அறிந்த ஏகன் அவன் 
இனி ஒன்றை அறிய இனி ஒன்றும் இல்லை 
எங்கும் அறிந்தொழுகவேண்டி அவன் தந்த பகுத்தறிவு 
அவனை அளக்க முற்படின் 
எதையளக்க அறிவுதந்தானோ 
அதை மறந்து ஏற்றம் தரும் 
உபயம் தொறந்து எது கேள்வி என்று அறியா 
எல்லாமே கேள்வியாகவே 
தொக்கி நிற்கும் தொவியாகும் வாழ்வு 


ஒண்ணும் தெரியாதவன்:

மனைவி மக்கள் 
உற்றம் சுற்றம் 
நட்பு துரோகம் 
கூடவே தன்னையும் முழுமையாக 
பகுத்தறிய முடியா பகுத்தறிவினை கொண்டு 
இவையனைத்தையும் ஆட்டுவிக்கும் 
ஏகனை பகுத்தறிய முற்படின் 
ஏற்றம் உண்டோ 
இம்மை மறுமை வாழ்வில் 



கண்ணை மூடிக்கொண்டு 
தியானம் அல்ல என் தத்துவம் 
கேள்வியை வைத்து 
பதில் தேட சொல்லும் மார்க்கம் 
ஊர் உறவு சுற்றம் எல்லாம் சூழ்ந்து நின்று 
நீ தனித்த பின் 
என்ன இருக்கிறது எங்கே இருக்கிறாய் யார் நீ 
என்ற கேள்விக்கு
விடை தேட சொல்லும் வலி அது 



மார்க்கம் சொல்லும் வழியை 
பகுத்தறியா மூடர் வாழும் அவனியில் 
சரியான பாதைக்கு 
சரியான பகுத்தறிவாளர் என 
பகுத்தறிய முடியாதோர்க்கு 
மார்க்கம் என்ன 



ஒற்றையானோம் என்றில்லாமல் 
அடுத்தவர்க்கு எடுத்தோதுவதே 
உயர்ந்த பணி என்று 
படைத்தவன் பணித்ததை 
கொண்டு செல்வதே பகுத்தறிவு 



இருட்டில் இருக்கும் பாமரனுக்கு 
ஏகனே கலங்கரை விளக்கு 


இன்னும் வரும்...........!

இந்த சொல்லாடல் இடம் பெற்ற முகப் பக்கத்திக்கு 

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!